Skip to main content

Posts

Showing posts from May 25, 2022

இறால் மற்றும் மீன்வளர்ப்பு இயங்குதளமான அக்வா கனெக்ட் கிடைத்த பெருமை

இறால் மற்றும் மீன்வளர்ப்பு இயங்குதளமான அக்வா கனெக்ட் (Aquaconnect) தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு தீவனம் மற்றும் இதர பண்ணை உள்ளீடுகள், உற்பத்தி, நிதி, மற்றும் காப்பீடு சார்ந்த சிக்கல்களை தீர்ப்பதோடு, அறுவடை செய்தபின் சந்தையில் விற்கவும் வழி செய்கிறது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் டாவோஸுக்கு UMAGINE அமைப்பின் தலைமையில் செல்லும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் ஒரு பகுதியாக Aquaconnect செல்கிறது. அங்கு தன் நிறுவனம் மூலம் மீன் மற்றும் இறால் விவசாயிகளுக்கு அளிக்கும் தொழில்நுட்பத் தீர்வுகளை காட்சிப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்து Aquaconnect-ன் நிறுவனர், சிஇஓ ராஜமனோகர் சோமசுந்தரம் கூறுகையில், "உலகெங்கிலும் உள்ள முன்னணி நிறுவனங்களுடன் இந்தத் துறையில் எங்களின் கற்றல் அனுபவங்களையும், ஏற்படுத்திய தாக்கத்தையும் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறோம். விவசாய சமூகத்தினரிடையே லாபகரமான மீன்வளர்ப்பு, மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 2017இல் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம். இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் செயற்கை

மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் வாய்கால்களை சீரமமைப்பது குறித்து ஆய்வு

இன்று (25.05.2022) மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் தி-ரு.எ.வ.வேலு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் ஆகியோர் பெருநகர சென்னை மாநாகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பினைத் தடுக்கும் வகையில் மழைநீர் வடிகால் வாய்கால்களை சீரமமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / அரசு முதன்மைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மண்டல குழுத் தலைவர் திரு.துரைராஜ், நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.05.2022) சென்னை, கிண்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பட்டா, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை மற்றும் பிற வருவாய்த் துறை சேவைகள் பெற வந்திருந்த பொதுமக்களிடன் அவர்களுடைய கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.

தொழிலாளர் நல வாரியத்தின் 79-வது வாரியக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி  இன்று  (25.05.2022) டி.எம்.எஸ். வளாகத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில், தொழிலாளர் நல வாரியத்தின் 79-வது வாரியக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வாரிய உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.ஏ.கிருஷ்ணசாமி, முதன்மைச் செயலாளர்/தொழிலாளர் நல ஆணையர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப., தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை செயலாளர் திரு.கிர்லோஸ் குமார், இ.ஆ.ப., உலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் திரு.ஜெகதீஷ், தொழிலாளர் நல வாரியச் செயலாளர் திருமதி.எ.யாஸ்மின் பேகம், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 உதவி புவியியலாளர்களுக்கு பணிநியமன ஆணை

இன்று (25.05.2022) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள் தமிழ்நாடு தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 15 உதவி புவியியலாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். உடன் புவியியல் மற்றும் சுரங்க துறையின் இயக்குநர் திரு.எல்.நிர்மல்ராஜ், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர் திரு.எஸ்.சுதர்சனம் உள்ளனர்.

மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கப்பட்டது

இன்று (25.05.2022) கொய்யாதோப்பு திட்டப்பகுதியில், மாண்புமிகு குறு, சிறு  மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரன், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய கொய்யாதோப்பு மற்றும் காக்ஸ் காலனி திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்படவுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.92.64 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.  உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதி மாறன், வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ், இ-.ஆ.ப., பணிகள் குழுதி தலைவர் திரு.நே.சிற்றரசு, தேனாம்பேட்டை மண்டல குழுத் தலைவர் திரு.எஸ்.மதன்மோகன், மாமன்ற உறுப்பினர்கள் திரு.சிவராஜசேகரன், திரு.இரா.ஜெகதீசன், வாரிய தலைமைப் பொறியாளர் திரு.இராம சேதுபதி, நிர்வாகப் பொறியாளர் திரு.எஸ்.சுடலை முத்து, வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கய்யா நாயுடு

தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த மாண்புமிகு இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கய்யா நாயுடு அவர்களை இன்று (25.05.2022) சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் & காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சிவி.வீ.மெய்யநாதன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ-.ஆ.ப., சென்னை (OTA, Commandant) லெப்டினன்ட் ஜெனரல் திரு.மானிக் குமார் தாய், காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., பொதுத் துறைச் செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன், இ.ஆ.ப., ஆகியோர் வரவேற்றனர்.

மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை தொடங்கி வைத்தர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (25.05.2022) சென்னை, இராணி மேரி கல்லூரியில், மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை  தொடங்கி வைத்து, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்புப் பயிற்சி சான்றிதழ்கள் மற்றும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன், மாண்புமிகு தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு, துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா, இ.ஆ.ப., தொழிலாளர்கள் நலன் - திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் திரு.ஆரி.கிரிலோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ம.பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமதி.