Skip to main content

Posts

Showing posts from May 24, 2022

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், காவிரி டெல்டா பகுதிகயில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து இன்று (24.05.2022) தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். இந்நிகழ்ச்சியில்,   மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன்,  மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என்.நேரு, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.செ.செந்தில்குமார், திரு.எஸ்.ஆர்.பார்த்திபன், திரு.ஏ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர் திரு.இரா.இராஜேந்திரன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.சந்தீப் சக்சேனா, இ.ஆ.ப., சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.கார்மேகம், இ.ஆ.ப., நீர்வளத் துறையின் முதன்மை தலைமைப் பொறியாளர் திரு.இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர். ---------------------------------------------------------------- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (24.05.2022) சேலம் மாவட்டம், மேட்டூரில், காவிரி டெல்டா மாவட்டங்க

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூக வலைதளப் பதிவு

என் இனிய தோழரும், மாண்புமிகு கேரள முதலமைச்சருமான திரு.பினராயி விஜயன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக போராடவும், நாட்டின் ஒற்றுமைக்காக கேரளா தனது வலிமையைக் காட்டவும் வாழ்த்துக்கள்.

கலாமின் உலக சாதனையில் இடம்பெற்ற வேலம்மாள் மாணவன்.

அண்மையில் சென்னையில் ' கலாமின் உலக சாதனை நிறுவனம்'இறை வழிபாட்டுடன் தொடர்புடைய இளம் குழந்தைகள் குறைந்த நேரத்தில் 10 பிரார்த்தனை ஸ்லோகங்கள் கூறுதல் என்ற போட்டியை ஏற்பாடு செய்திருந்தது.இந்நிகழ்வில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த இளம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆவடி வளாகத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயாவில் யு.கே.ஜி  பயிலும் 5 வயது  4 மாதங்கள் நிறைவு பெற்ற செல்வன். ஜே.ஸ்கந்தவர்தன் பங்கு பெற்று 2 நிமிடங்களுக்கு குறைந்த நேரத்தில்   தினசரி பிரார்த்தனை  ஸ்லோகங்கள் வாசித்ததற்காக 'உலக சாதனை லெஜண்ட்' என்ற பட்டம் பெற்றார். அளப்பரிய சாதனைப் படைத்த அவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்தியது.

Velammal Organises Virtual Summer Camp

Velammal Nexus in association with Lamb Tail Club has organised a Virtual Summer Camp 2022 from 11th May, 2022 to 31st May, 2022  Amazing courses, specially curated by experts for child's overall development. This camp has taken a digital platform to provide diverse courses tailored for the age group 5 to 7 years and 8 to 14 years which meets the passion and interest of the students as every session is inclusive and interactive, creating a social outlet for kids.  All participants will receive E - Certificates. Highlighting the benefits of the camp courses like Art & Craft and Origami is to improve their creativity and concentration. Karate & Fitness and Yoga offers a complete full body workout with overall health and fitness. An array of camps in Science and technology ,STEM, AI, Web and APP developer designed to give best hands-on learning  approach  to science to fosters creativity and innovation to experience deeper learning  by trying new adventures with fun activities

நேரு உள் விளையாட்டு அரங்கை மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார்

26.05.2022 அன்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களின் வருகையையொட்டி, 23.05.2022 அன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு கணிகளை மாண்புமிகு பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், நெடுஞ்சாலைத் துறை முதன்மைச் செயலாளருமான திரு.தீரஜ்குமார், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் திரு.தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., தேசிய நெடுஞ்சாலைத் துறை சென்னை மண்டல அலுவலர்கள் திரு.சோமசேகர், நெடுஞ்சாலைத் துறை முதன்மை பொறியாளர்கள் திரு.சந்திரசேகர், திரு.பாலமுருகன், பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் திரு.விஸ்வநாத் மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பொறியாளர்கள் உடன் இருந்தனர்.