Skip to main content

Posts

Showing posts from May 27, 2022

பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (27.05.2022) சென்னை, பள்ளிக்கரைணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், பள்ளியின் தலைவர் திரு.வினய் பாரிக், பள்ளியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் திரு.வெங்கடவரதன், திரு.ராஜுவ் சவுத்ரி, நிர்வாக அறங்காவலர் திரு.ரவி மல்«---ஹாத்ரா, அக்கல்வி குழுமத்தின் நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி

மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் நேற்று (26.05.2022) சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அரசு விழாவில், சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டடுக்கு உயர்மட்டச் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். அருகில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள், மாண்புமிகு ஒன்றிய மீன்வளம், கால்நடை, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் திரு.எல்.முருகன் அவர்கள் ஆகியோர் உள்ளனர். மதுரை - தேனி இடையேயான அகல இரயில் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார். பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கிழ் சென்னை, பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் முன்மாதிரி வீட்டு வசதி திட்டமான லைட் ஹவுஸ் திட்டத்தில் ரூ.116.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1,152 குடியிருப்புகளைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.